நவகமுவ துப்பாக்கிச் சூடு: காயமடைந்த 26 வயது இளைஞன் மருத்துவமனையில் உயிரிழப்பு
நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்துரம்முல்ல பகுதியில் நேற்று (16) மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் இன்று (17) உயிரிழந்துள்ளார். ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்.
உயிரிழந்தவருக்கு வயது 26 என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் துப்பாக்கிச் சூடு பிஸ்டல் வகை ஆயுதத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து நவகமுவ பொலிஸார் தனிகுழுவை ஒன்றை அமைத்து, விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்கள், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள், மற்றும் அயலவர்களிடமிருந்து பெறப்படும் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும், சந்தேகநபர்களை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.