நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (26) காலை  சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டார்.

மே 26, 2025 - 15:08
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (26) காலை  சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டார்.

2021ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராக மஹிந்தானந்த அலுத்கமகே கடமையாற்றிய போது, தரமற்ற உரங்களை இறக்குமதி செய்வதற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தியமை தொடர்பில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த 19ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜரானதைத் தொடர்ந்து, அவரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!