லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
எரிவாயு விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மாதாந்த விலை சூத்திரத்துக்கு அமைய மார்ச் மாதம் சமையல் எரிவாயு விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தற்போதுள்ள எரிவாயு விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மாதாந்த விலை சூத்திரத்துக்கு அமைய, நேற்று (29) நள்ளிரவு முதல் குறித்த விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.
இதேவேளை, இம்மாதத்தில் எவ்வித விலை திருத்தமும் இன்றி தற்போதுள்ள விலைக்கே எரிபொருள் விற்பனையை மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.