கதிர்காம யாத்திரிகள் விபத்தில் சிக்கினர்; 10 பேர் காயம்

பாறுக் ஷிஹான்
கதிர்காமத்தில் இருந்து யாத்திரிகளை ஏற்றிக் கொண்டு, அம்பாறை வழியூடாக மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த தனியார் போக்குவரத்து பஸ், இன்று (21) அதிகாலை 03 மணியளவில் சம்மாந்துறை வங்களாவடிப் பிரதேசத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பஸ் சாரதி விபத்து நடந்தவுடன் தப்பியோடிவிட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.