ஈரான் மீது தாக்குதல்கள் தொடரும்: நெதன்யாகு அதிரடி அறிவிப்பு
மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதலின் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமாகிறது. பிப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணியுடன் ஈரானின் வான்வழி மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகளை கடுமையாக தாக்கியதன் பின்னர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர்.
பதிலாக ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தளங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. சர்வதேச அமைப்புகள் மற்றும் முக்கிய நாடுகள், இந்தியா, சீனா, ரஷியா போன்றவை, போரை முடிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடைபெறவுள்ள ராணுவ நடவடிக்கைகளை 5 நாட்களுக்கு ஒத்திவைத்தார்.
இருப்பினும், ஈரான் அரசு போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளது. மேலும், “எங்களின் எச்சரிக்கைக்கு ஜனாதிபதி டிரம்ப் பணிந்துவிட்டார்” எனவும் விமர்சனம் முன்வைத்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஈரானின் ஏவுகணை மற்றும் அணு திட்டங்களை முறியடிக்க நடவடிக்கைகள் தொடரும் என்று அறிவித்தார். ஹிஸ்புல்லா அமைப்புக்கும் தாக்குதல்கள் தொடரும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ராணுவ ஆதரவுடன் இலக்குகளை அடையும் வாய்ப்பு உள்ளதாகவும், ஈரானின் முக்கிய ராணுவ திட்டங்களை முறியடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து, ஹார்முஸ் நீரிணை மற்றும் சர்வதேச போக்குவரத்து பாதிக்கப்படுவதற்கான அபாயம் உருவாகியுள்ளது. வர்த்தகத்திலும், மனிதாபிமான நிலைகளிலும் ஈரானை சுற்றிய சூழல் நெருக்கடியில் உள்ளது.
