ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் நடவடிக்கைகள் நிறைவடைந்ததாக மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய தாக்குதல் நடந்தால் பேரழிவு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சிறிய குழுவுடன் வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்கிறார். அமெரிக்காவுடனான நேரடிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முக்கியப் படியாக இந்தப் பயணம் கருதப்படுகிறது.
உலக எரிசக்தி விநியோகத்தில் முக்கிய இடம் வகிக்கும் இந்த நீரிணை முடங்கியதால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அமெரிக்க கடற்படை முற்றுகை அமலுக்கு வந்த பின்னரும், ஹோர்முஸ் ஜலசந்தியை சில கப்பல்கள் கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூன் மாதத்துக்குப்பிறகு ஈரான் அவற்றை தொடவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், டிரம்பின் இந்த அறிவிப்புக்கு ஈரான் எந்தவிதமான பதிலையும் தரவில்லை.
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், தற்காப்பு மற்றும் தாக்குதல் திறனை அதிகரிக்க மேற்காசியாவிற்கு மேலும் 10,000 அமெரிக்க வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.
ஈரான் தங்களை அழித்துவிடுவார்கள் என்ற பயத்தில் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானில் இரு நாடுகளும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை மட்டுமே நிரந்தரத் தீர்வைத் தரும் எனச் சீனா வலியுறுத்தியுள்ளது.
ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை முறியடிக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடரும் தாக்குதல்கள். நெதன்யாகு, ஹிஸ்புல்லா மீதும் நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் அமெரிக்காவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உறுதி செய்துள்ளது. அதே சமயம் டிரம்ப் ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஏற்படும் என்று கூறினார்.
இலங்கை தனது நட்பு நாடு என ஈரான் மீண்டும் உறுதி தெரிவித்தது. எரிபொருள் உள்ளிட்ட உதவிகளை எந்த நேரத்திலும் வழங்க தயார் என அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என சக் ஷூமர் வலியுறுத்தினார். போருக்காக கோடிக்கணக்கான டாலர்கள் வீணாகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஹார்முஸ் நீரிணை பிரச்சினையைத் தொடர்ந்து ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசிய கட்டமைப்புகள் குறிவைக்கப்படலாம் என உலகளவில் கவலை அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரில் அமெரிக்கா திறம்பட வெற்றி பெற்றுள்ளது, தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களில் விளைவு தீர்மானிக்கப்பட்டது, ஆனால் படைகள் பணியை தொடர்கின்றன” என கூறியுள்ளார்.
இந்த கோடைக்காலத்தில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளில் ஈரான் அணி கலந்து கொள்ள வரவேற்பு அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் என்று பிஃபா தலைவர் ஜியான்னி இன்ஃபாண்டினோ கூறியுள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை இன்று 11-வது நாளாக தொடர்கிறது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.