சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில் வெளியான தகவல்
ரஷ்யாவில் இருந்து 32,030 பேரும், இந்தியாவில் இருந்து 30,027 பேரும், சீனாவில் இருந்து 14,836 பேரும் இவ்வாறு வந்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதத்தில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இரண்டு இலட்சத்து 18 ஆயிரத்து 350 சுற்றுலாபயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து 32,030 பேரும், இந்தியாவில் இருந்து 30,027 பேரும், சீனாவில் இருந்து 14,836 பேரும் இவ்வாறு வந்துள்ளனர்.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.