இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று(14) சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று(14) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.
யாழில் அம்பியுலன்ஸ் வண்டியில் சென்று உயர்தர பரீட்சை எழுதிய மாணவி
ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, அம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.