நாடளாவிய ரீதியில் மரக்கறி விலைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
மழையால் பயிர்கள் சேதமடைவதாலும், காய்கறிகளை சந்தைக்கு உரிய நேரத்தில் கொண்டு வரமுடியாத நிலை காரணமாக மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்து வருகின்றது.
ஒரு கிலோகிராம் தக்காளியின் சில்லறை விலை 800 ரூபாயாகவும் மற்றும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் சில்லறை விலை 500 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், போஞ்சி கிலோகிராம் ஒன்றின் விலை 1000 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் வெண்டைக்காய் மற்றும் கரட் சில்லறை விலை 600 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
மேலும், தேங்காய் ஒன்றின் விலை சில பிரதேசங்களில் 140 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.