இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி
இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதன்படி இலங்கைக்கு சுமார் 2.9 பில்லியன் டொலர் கடன் உதவி வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.