கடும் வெப்பநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ஏப்ரல் மாதம் நடுப் பகுதி வரையில் நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் நடுப் பகுதி வரையில் நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடும் வெப்பநிலை நிலவும் பகல் நேரத்தில் வெளியே செல்வதை முடிந்தளவு குறைத்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடும் வெப்பநிலை காரணமாக காற்றின் வேகம் மற்றும் மேகக் கூட்டங்கள் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றும் நாளையும் மாணவர்களை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
விளையாட்டுப் பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.