சீரற்ற காலநிலையால் 8 பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் 8 பாடசாலைகளுக்கு இன்று(19) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற காலநிலையால் 8 பாடசாலைகளுக்கு விடுமுறை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சீரற்ற காலநிலை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் 8 பாடசாலைகளுக்கு இன்று(19) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 1,586 குடும்பங்களைச் சேர்ந்த 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வருவதும் குறைவாகவே இருக்கின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 341 குடும்பங்களைச் சேர்ந்த 1,039 பேர் 7 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன். முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 8 பாடசாலைகளை இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 3 பாடசாலைகளதும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5 பாடசாலைகளதும் கற்பித்தல் செயற்பாடுகள் இன்றைய தினம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -