இன்று பலத்த மழை - பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்கள் இதோ!
நாட்டின் பல மாகாணங்களில், 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாடு முழுவதும் மழை நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பல மாகாணங்களில், 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மி.மீ. சுமார் 100 கனமழை பெய்யக்கூடும்.
மேற்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் காலையிலும் மழை பெய்யும்.
அத்துடன், இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.