இந்த மாதத்தில் மின் கட்டணம் குறைகின்றதா? வெளியான அறிவிப்பு
கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மின்சார கட்டண திருத்தத்தை 16 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரும் 08ஆம் திகதி வரை மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான எழுத்துமூல மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.