அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் திகதி அறிவிப்பு
இந்த கொடுப்பனவுகள் அடுத்த புதன்கிழமைக்குள் (17) அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும நலன்புரி உதவித்தொகையான ரூபாய் 2500, எதிர்வரும்15 ஆம் திகதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று(11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 182,000 குடும்பங்களுக்கு சுமார் 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த கொடுப்பனவுகள் அடுத்த புதன்கிழமைக்குள் (17) அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக கேகாலை, பொலன்னறுவை, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் உள்ள பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
எஞ்சிய அஸ்வெசும கொடுப்பனவுகளை செலுத்தியதன் பின்னர், எஞ்சிய கொடுப்பனவுகளையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.