அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான விசேட தகவல்
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அஸ்வெசும பயனாளிகளுக்கான நவம்பர் மாதத் தவணைக்கான பணம் இன்று (13.11.2025) முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும்.
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அஸ்வெசும பயனாளிகளுக்கான நவம்பர் மாதத் தவணைக்கான பணம் இன்று (13.11.2025) முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும். இந்த விடயத்தை நலன்புரி நன்மைகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, 1,415,738 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு 11.2 பில்லியன் ரூபாய் மாற்றப்படும்.
குடும்பங்களுக்கான கொடுப்பனவு நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பிலான வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அண்மையில் தெரிவித்திருந்தது.
2023 ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த தகவல் புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று சபை குறிப்பிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் மனக்குறைகளை தெரிவித்த விண்ணப்பதாரர்கள் தகவல்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை.
இதற்குக் காரணம், அவர்களின் தகவல் ஏற்கனவே ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.