இடியுடன் கூடிய மழை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

மார்ச் 25, 2024 - 12:29
இடியுடன் கூடிய மழை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.    

எனவே, இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!