இலங்கை கிரிக்கெட் வீரரின் தங்க சங்கிலியை மோசடி செய்த நடிகைக்கு பிணை

உரிமையாளரின் அனுமதியின்றி, பத்தரமுல்ல பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரரின் தங்க சங்கிலியை மோசடி செய்த நடிகைக்கு பிணை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மோசடி வழக்கில், இளம் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 30) ஆஜர்படுத்தப்பட்ட அவர், கிரிக்கெட் வீரருக்குச் சொந்தமான உயர்மதிப்புள்ள தங்க சங்கிலியை சட்டவிரோதமாக அடகு வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பொலிஸ் தகவல்களின் படி, 9 இலட்சம் ரூபாய்க்கும்  அதிகமான மதிப்புள்ள தங்க சங்கிலியை அதன் உரிமையாளரின் அனுமதியின்றி, பத்தரமுல்ல பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் தலங்கம பொலிஸார் விசாரணை மேற்கொண்டு நடிகையை கைது செய்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நீதிமன்றத்தில் சந்தேக நபருக்காக ஆஜரான சட்டத்தரணி, அடகு வைக்கப்பட்ட நகையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க முடியும் என வாதிட்டார். இதனை பரிசீலித்த நீதிமன்றம், தலா  5 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய இரண்டு சரீர பிணையில் அவரை விடுவிக்க உத்தரவிட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட தங்க சங்கிலியை மீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -