நீர் கட்டணம் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்படும்
அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பபெற்றால் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் குடிநீர் கட்டணம் அதிகரிக்கும் .
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
எதிர்வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபையின் பொது முகாமையாளர் வசந்தா இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பபெற்றால் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் குடிநீர் கட்டணம் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குடிநீர் கட்டணத்தை எத்தனை சதவீதம் அதிகரிப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகின்றது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -