ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி: ஈரான் ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு; அமெரிக்கா பொருளாதார எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு பணிய மறுத்ததை ஈரான் தனது வெற்றியாகக் கருதுகிறது
ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி: ஈரான் ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு; அமெரிக்கா பொருளாதார எச்சரிக்கை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஈரான் உடனான போரில் அமெரிக்கா தோல்வியடைந்துவிட்டதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் அரசு செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு பணிய மறுத்ததை ஈரான் தனது வெற்றியாகக் கருதுகிறது. இதனால் உலக நாடுகள் வெறுக்கத்தக்க நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. ஈரானுடனான போரில் அமெரிக்கா முழுவதுமாக தோல்வியடைந்து, சரணாகதி அடைந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதற்கிடையே, ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரப் போரைத் தொடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அதாவது, தெஹ்ரானுக்கு ஆதரவு அளிக்கும் எந்தவொரு நாடும் அல்லது நிதி நிறுவனமும் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர