துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

ஹம்பேகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹம்பேகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (12) இரவு ஹம்பேகமுவ சீனுகல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த இருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வீட்டின் உரிமையாளரும் அவரது உறவினர்களும் விருந்தில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், 24 வயது மற்றும் 42 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஹம்பேகமுவ மற்றும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -