எட்டு கிலோகிராம் தங்கத்துடன் இருவர் கைது

டிங்கி படகில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு பொதிகளில் இருந்த தங்கம், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

எட்டு கிலோகிராம் தங்கத்துடன் இருவர் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

Colombo (News21) கடல் மார்க்கமாக எடுத்துச் செல்ல முற்பட்ட 08 கிலோ 450 கிராம் தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி - வன்னிமுந்தலம் கலப்பு பகுதியில் இன்று புதன்கிழமை (12) காலை கடற்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அங்கு சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். 

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் டிங்கி படகில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு பொதிகளில் இருந்த தங்கம், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT