பாடசாலை ஆரம்பம் குறித்து கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்துப் பாடசாலைகளிலும் மூன்றாம் தவணை ஜனவரி 24ஆம் திகதியுடன் முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
