பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க சத்தியப்பிரமாணம்
பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் முன்னிலையில் இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்தார்.
சத்தியப்பிரமாணம் செய்தபின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையெழுத்திட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயரத்னவின் உயிரிழந்த நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அசமந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
