எதிர்வரும் 3 நாட்களுக்கு மின் துண்டிப்பு இவ்வாறுதான் அமுலாகும்!
இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, குறித்த மூன்று நாட்களிலும் A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அவ்வாறே, குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாகவுள்ளது.
அத்துடன் கொழும்பு நகர் பகுதியில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையான காலப்பகுதியில் 3மணி நேரம் மின் துண்டிப்பை அமுல்படுத்த பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02 |