தெற்குக் கடற்பரப்பில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் மீன்பிடி படகு

படகில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்குக் கடற்பரப்பில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் மீன்பிடி  படகு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையின் தெற்குப் பகுதி ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது பலநாள் மீன்பிடி படகு ஒன்றை இலங்கை கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அந்த படகில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறித்த பலநாள் மீன்பிடி படகு தற்போது கடற்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இந்த பிடிப்பை தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -