மோசமான வானிலை: கட்டுநாயக்க வந்த விமானங்கள் மத்தல விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டன!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பல விமானங்கள் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் மோசமான வானிலையே இதற்கு காரணமாகும். சுமார் 6 விமானங்கள் இவ்வாறு மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
