தமிழ் மொழிமூல ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

இந்த விண்ணப்பப் படிவங்களை இணைய முறைமை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழிமூல ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாட்டின் பெருந்தோட்டப்புற தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கு பாடசாலை அடிப்படையில் ஆசிரியர் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தகைமைகளைக் கொண்ட பெண்கள், ஆண்கள் ஆகிய இருசாராரிடம் இருந்தும் விண்ணப்பப்படிவங்கள் கோரப்படுகின்றன. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இது தொடர்பான வர்த்தமானி கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்படி, ஆட்சேர்ப்புக்கான தகைமைகளை பூர்த்தி செய்த ஆண்களும் பெண்களும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். 
 
இந்த விண்ணப்பப் படிவங்களை இணைய முறைமை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி இரவு 9 மணிவரையில் மாத்திரமே விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -