வார இறுதி மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இதன்படி, நாளை (23) நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், நாளை மறுதினம் (24) 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.
வார இறுதி மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுதினம் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்படி, நாளை (23) நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், நாளை மறுதினம் (24) 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதற்கமைய, நாளைய தினம்(23) A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே, குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(24) A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே, குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5.20 மணிமுதல் இரவு 9.20 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -