எதிர்வரும் இரண்டு நாட்களில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு

இதற்கமைய, இன்று (21) மற்றும் நாளை (22) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் இரண்டு நாட்களில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு

நாட்டில் இன்றும் நாளையும் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, இன்று (21) மற்றும் நாளை (22) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிக்குள் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் குறித்த வலயங்களுக்கு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாகவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர