கொழும்பில் இன்று 16 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் இன்று (13) நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (13) நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று மாலை 05.00 மணி முதல் நாளை காலை 09.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.