நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 உறுப்பினர்களின் ஆதரவு; கம்மன்பில

அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் 25, 2022 - 17:54
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 உறுப்பினர்களின் ஆதரவு; கம்மன்பில

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தாம் உட்பட 120 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எனவே, தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்வதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்குவதாக உதய கம்மன்பில கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இல்லாவிட்டால், அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!