யாழில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 22, 2023 - 13:42
யாழில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் பகுதியை சேர்ந்த கடையின் உரிமையாளரே நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவரே கொல்லப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த கும்பலால் இந்த கொடூர செயல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.   

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!