எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு விவரம்

எதிர்வரும் இரு தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

செப்டெம்பர் 19, 2022 - 22:21
எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு விவரம்

நாட்டில் எதிர்வரும் இரு நாட்களில் (20,21) சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் இரு தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!