பிரேசிலில் மண்சரிவு : வீதி, ரயில் வழித் தொடர்புகள் துண்டிப்பு

தொடர் மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பரானாகுவா - அன்டோனினா துறைமுகங்களுக்கான பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30, 2022 - 12:27
பிரேசிலில் மண்சரிவு : வீதி, ரயில் வழித் தொடர்புகள் துண்டிப்பு

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, தானிய ஏற்றுமதியில் இரண்டாவது மிகப்பெரிய பரனகுவா துறைமுகத்திற்கான வீதி மற்றும் ரயில்வழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

தொடர் மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பரானாகுவா - அன்டோனினா துறைமுகங்களுக்கான பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவில் மலைகள் சரிந்து வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு மண் மலைகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டன. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!