திருகோணமலை மோதலில் இருவர் உயிரிழப்பு
காணி பிரச்சினை காரணமாக திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
