அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறித்து அமைச்சரவை அவசர முடிவு

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறித்து அமைச்சரவை அவசர முடிவு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானமொன்றை எடுத்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்படி, நிறைவேற்று அதிகாரம் அற்ற ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், நிறைவேற்று அதிகாரிகளின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதிக்கு சில நாட்களுக்குப் பின்னர் வழங்குவதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

திறைசேரியின் நடவடிக்கைகள் தொடர்பில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை அமைச்சர்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் புதிய வருவாய் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் கிடைக்கும் வருவாய் வசூலிக்க சிறிது காலம் எடுக்கும் என்பதால், அரச ஊழியர் சம்பளம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2023 ஜனவரி முதல் அடுத்த சில மாதங்களுக்கு அரசு செலவினங்களை நிர்வகிப்பதற்கு அரசு ஊழியர்களின் சம்பளத்தை வழங்க அமைச்சர்கள் குழு முன்மொழிந்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -