மோட்டார் சைக்கிளுடன் வாகனம் மோதியதில் ஊடகவியலாளர் உயிரிழப்பு!
அநுராதபுரம், ஹபரணை, கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம், ஹபரணை, கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரியில் இருந்து கந்தளாய் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் வாகனமொன்று மோதியதில் இந்த விபத்து இன்று சனிக்கிழமை (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற திருகோணமலை கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.