கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டு பெண் கொலை

அதுருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மர ஆலை ஒன்றில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டு பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மே 3, 2023 - 11:04
கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டு பெண் கொலை

அதுருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மர ஆலை ஒன்றில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டு பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று (02) பிற்பகல் இக்கொலை இடம்பெற்றுள்ளதுடன், மர ஆலையின் ஊழியர் ஒருவரும் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரம் அறுக்கும் ஆலையின் உரிமையாளரான 65 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொலையாளிகள் இறந்தவரின் வாயில் கத்தியால் தாக்கியுள்ளனர்.

கொலை நடந்த இடத்தில் இருந்து அத்துருகிரி பொலிஸ் நிலையம் நூறு மீற்றருக்கும் குறைவான தூரத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!