கணவரின் துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி

பதுளை ஹிடகொட பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செப்டெம்பர் 1, 2024 - 17:37
கணவரின் துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி

பதுளை ஹிடகொட பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

32 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது கணவராலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு யுவதி ஒருவருடன் தொடர்புள்ளமை மனைவிக்கு தெரியவந்ததையடுத்து, குறித்த யுவதியின் வீட்டிற்கு இருவரும் சென்ற போதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரான கணவர் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!