வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு இன்று இதனைக் கூறியுள்ளார்.

டிசம்பர் 25, 2023 - 00:16
வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மது அருந்திவிட்டு மற்றும் அதிவேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அறிவுறுத்தியுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு இன்று இதனைக் கூறியுள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கு பிரதான மற்றும் குறுக்கு வீதிகளில் பொலிஸாரை 24 மணிநேரம் பணியில் ஈடுபடுத்தடுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வருடத்தின் இறுதிக் காலப்பகுதியில் அதிகளவான வீதி விபத்துகள் இடம்பெறுவதுடன், பெருமளவான உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!