எட்டியாந்தோட்டை தீ விபத்து; இருவர் உயிரிழப்பு

இன்று (03) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜுலை 3, 2024 - 10:54
எட்டியாந்தோட்டை தீ விபத்து; இருவர் உயிரிழப்பு

எட்டியாந்தோட்டை, பலல்லேகம பிரதேசத்தில் உள்ள தோட்ட லயன் வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (03) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதலாம் வீட்டில் தங்கியிருந்த 60 வயதுடைய ஆணும் 50 வயதுடைய பெண்ணும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் 03 தோட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!