வவுனியாவில் முச்சக்கரவண்டி விபத்து: இருவர் படுகாயம்
வவுனியா மாவட்ட நீதிமன்றிக்கு அருகே இன்று (09) மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

வவுனியா மாவட்ட நீதிமன்றிக்கு அருகே இன்று (09) மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா பழைய பேரூந்து நிலையத்திலிருந்து ஏ9 வீதியூடாக வைத்தியசாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து நீதிமன்றிக்கு அருகே வீதியின் மறுபக்கம் சென்று வீதி தடுப்புச்சுவரில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளாகியதுடன் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.