புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (25) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அமைச்சரவை கடந்த 18ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போதிலும், இதுவரையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.