தமிழகத்தில் இன்று திடீர் நிலநடுக்கம் !

கர்நாடக மாநிலம் - விஜயபுரா பகுதியிலும் இன்று காலை 6.52 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

டிசம்பர் 8, 2023 - 14:05
தமிழகத்தில் இன்று திடீர் நிலநடுக்கம் !

தமிழகத்தில் இன்று (08) காலை திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் 3.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தமிழக தேசிய புவியியல் ஆய்வு நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே மழை வெள்ளப் பாதிப்பால் சென்னை மக்கள் அவதியுற்றுவரும் நிலையில், இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை அங்கு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கர்நாடக மாநிலம் - விஜயபுரா பகுதியிலும் இன்று காலை 6.52 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், அது 3.1  ரிச்டர் அளவுகோலில் பதிவானதாகவும் இந்திய தேசிய புவியியல் ஆய்வு நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!