மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு... வெளியான தகவல்!
நாட்டில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சதொச வர்த்தக நிலையங்களிலும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் கூறியுள்ளனர்.
சந்தையில் முட்டையொன்றின் விலை 60 ரூபாயாக காணப்படுவதுடன், எதிர்காலத்தில் மீண்டும் விலை அதிகரிக்கப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 7 மில்லியன் முட்டைகள் அடுத்த வாரம் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுதாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.