சிறைக்கைதிகளை பார்வையிட சிறப்பு அனுமதி
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள இந்து மத கைதிகளை பார்வையிடுவதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், தைப்பொங்கல் தினத்தில் கைதிகளுக்கு உணவுப்பொதிகள், இனிப்புகளை வழங்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
தற்போது சிறைச்சாலைகளில் காணப்படுகின்ற சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக குறித்த உணவுகளை சிறைக்கைதிகளின் உறவினர்கள் வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.