O/L மற்றும் A/L பரீட்சைகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணத் தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து விசேட அறிவிப்பு இன்று(07) வெளியாகியுள்ளது.

கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணத் தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து விசேட அறிவிப்பு இன்று(07) வெளியாகியுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றில் உரையாற்றுகையில் இதனைக் கூறினார்.
அதற்கமைய, உயர்தரப் பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், 2023 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.