அடுத்த தேர்தலில் தனியாக களமிறங்கும் மொட்டு 

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை மற்றும் நிறைவேற்று சபை அண்மையில் கூடியபோது, இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

டிசம்பர் 23, 2024 - 13:00
அடுத்த தேர்தலில் தனியாக களமிறங்கும் மொட்டு 

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதில் கவனம் செலுத்தி வருவதாக அந்தக்  கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அந்த முன்னணியின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை சமசமாஜக் கட்சியானது ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் மாத்திரம் கவனம் செலுத்தியுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை மற்றும் நிறைவேற்று சபை அண்மையில் கூடியபோது, இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அங்கு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிடுவதே பொருத்தமானது என அக்கட்சியில் உள்ளவர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஆனால், இந்த நிலைமைகள் எதிர்காலத்தில் மாறலாம் என பொதுஜன பெரமுனவின் சில பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

அத்துடன், பொதுத் தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பிலும் அண்மையில் நடைபெற்ற நிர்வாக சபையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

மீண்டும் தொடர்பு கொள்வது பொருத்தமானது என பலர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், மற்றொரு குழு இதற்கு நேர்மாறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!