ஜனாதிபதியுடன் ஆளும் கட்சி தலைவர்கள் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆளும் கட்சி தலைவர்கள் இன்றைய தினம் சந்தித்து பேசவுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆளும் கட்சி தலைவர்கள் இன்றைய தினம் சந்தித்து பேசவுள்ளனர்.
மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதனைக் கூறியுள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளன.
பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.